×

ராட்சத அலையில் சிக்கியவர் பலி

பொன்னேரி: பழவேற்காடு கடலில் குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கியவர் பலியானார். சென்னை மூலக்கடை பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40). இவர் நேற்றுமுன்தினம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளார். அப்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் கடலில் குளித்தது தெரிய வந்தது.

The post ராட்சத அலையில் சிக்கியவர் பலி appeared first on Dinakaran.

Tags : Bonneri ,SENTHILNATHAN ,MOOLKADA AREA OF CHENNAI ,
× RELATED மீஞ்சூரில் வீட்டு வாசலில்...